• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

July 7, 2018 findmytemple.com

சுவாமி:கலியுகவரதராஜப் பெருமாள்.

அம்பாள்:ஸ்ரீதேவி,பூதேவி.

தலவிருட்சம்:மகாலிங்கமரம்.

தலச்சிறப்பு:இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது.இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது.மாறாக சிலைகள் எதுவும் இல்லை.இங்கு இக்கோவிலை கட்டியவர்களின் சிலைகளும் உள்ளது.

தல வரலாறு:250 ஆண்டுகளுக்கு முன் அரியலூர் அருகே,வன்னியகுலத்தில் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார்.இவருடைய மகன் மங்கான்,மாட்டு மந்தை ஒன்றை நடத்தி வந்தார். மந்தையில் கருவுற்ற நிலையிலிருந்த அழகிய பசு,மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை.மூன்றாம் நாள் இரவு,அவர் கனவில் “கவலைப்படாதே பக்தா!, காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது.காலையில் அங்கே கன்றுடன் பசுவைக்காண்பாய்!’ என இறைவன் கூறி மறைந்தார்.

அருகிலுள்ள நகரம்:அரியலூர்.

கோயில் முகவரி:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்,கல்லங்குறிச்சி – 621 705, அரியலூர் மாவட்டம்.

மேலும் படிக்க