• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்

July 5, 2018 findmytemple.com

சுவாமி:கற்கடேஸ்வரர்.

அம்பாள்:அருமருந்தநாயகி, அபூர்வநாயகி.

மூர்த்தி:கணபதி,முருகன்,சந்திரன்,தட்சிணாமூர்த்தி,துர்க்கை,தன்வந்தரி,அகஸ்தியர்.

தீர்த்தம்:நவபாஷாண தீர்த்தம்.

தலவிருட்சம்:பஞ்சதள வில்வம்.

தலச்சிறப்பு:தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் காவிரி நதியின் வடகரை தலங்களில் 42வது தலம் ஆகும்.கற்கடேஸ்வரர் திருக்கோவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இத்தலத்தில் இரண்டு அம்பாள் தனிதனிச் சன்னதிகளில் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

கோவிலின் உள்ளே சென்றவுடன் முதலில் விநாயகர்,பலிபீடம் மற்றும் நந்தி உள்ளது.முன் மண்டபத்தில் அருமருந்துநாயகி,அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் தனி தனி சந்நிதிகளில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள்.கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

கருவறை மேற்கு உட்பிரகாரத்தில் கணபதி,முருகன் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர்.நால்வர் சந்நிதியும் உட்பிரகாரத்தில் உள்ளது.தன்வந்தரி,அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளனர்.

இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது.கோவிலின் நுழைவுவாயிலில் சந்திரன் சன்னதி உள்ளது. இத்தலத்தில் சந்திரன் யோக நிலையில், “யோக சந்திரனாக” காட்சி தருகிறார்.ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள் சந்திரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால்,தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.கோவிலின் மதிற்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது.

மேலும் படிக்க