• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஸ்னா சின்னப்பா!

April 11, 2017 tamilsamayam.com

எல் கவுனாவில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா முன்னேறினார்.

எகிப்தின் எல் கவுனாவில் உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா, 9வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆலிசன் வாட்டர்ஸை சந்தித்தார்.

இதன் முதல் செட்டை 11-5 என வென்ற ஜோஸ்னா, அடுத்த இரண்டு செட்டையும் 7-11, 9-11 என கோட்டைவிட்டார். பின் எழுச்சி கண்ட ஜோஸ்னா அடுத்த இரண்டு செட்களையும், 11-8, 11-9 என தன்வசப்படுத்தினார்.

முடிவில், இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா, இங்கிலாந்தின் ஆலிசன் வாட்டர்ஸை 11-5, 7-11, 9-11, 11-8, 11-9 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மேலும் படிக்க