• Download mobile app
28 Aug 2026, FridayEdition - 3852
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரை தடை தாண்டும் போட்டி தொடக்கம்

August 28, 2026 தண்டோரா குழு

ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் சார்பில், இந்திய குதிரையேற்ற கூட்டமைப்பின் (Equestrian Federation of India) அங்கீகாரத்துடன் நடத்தப்படும் தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில் தொடங்கியது.இப்போட்டி,கோவை வெள்ளானைப்பட்டி அருகே மோளபாளையத்தில் உள்ள ஈக்வைன் ட்ரீம்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டியை எஸ்.என்.ஆர். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன்,ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவர் ஏ.எஸ். சக்தி பாலாஜி, எக்ஸ்போவான் நிறுவனர் டாக்டர் ஆர்.மகேந்திரன், இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சில் வர்த்தக தூதர் டாக்டர் ஆர்.சி.எம். விஷ்ணு பிரபு மற்றும் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

ஆறு மாநிலங்களைச் சேர்ந்த ஆறு அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணியிலும் ஆறு வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், மொத்தம் 54 பேர் போட்டியில் பங்கேற்கின்றனர். சென்னை புல்ஸ் (தமிழ்நாடு),பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் (கேரளா), கோல்கொண்டா சார்ஜர்ஸ் (தெலங்கானா),பெங்களூரு நைட்ஸ் (கர்நாடகா), எலைட் இக்வெஸ்ட்ரியன்ஸ் (மேற்கு வங்கம்) மற்றும் குவாண்டம் ரெய்ன்ஸ் (கோவா) ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான குதிரையேற்ற வீரர்கள் இவ்வணிகளில் இடம்பெற்றுள்ளனர்.

தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, குதிரையேற்ற வீரர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் தங்களது திறமைகளையும் சாகசங்களையும் செய்து காட்டினர். போட்டியின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. குதிரைகள் சீறிப்பாய்ந்து தடைகளைத் தாண்டி குதித்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

ஆகஸ்ட் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவர் ஏ.எஸ். சக்தி பாலாஜி கூறுகையில்,

குதிரை தடை தாண்டும் போட்டிகள் 100 செ.மீ., 110 செ.மீ. மற்றும் 120 செ.மீ. என மூன்று பிரிவுகளில் நடைபெறுகின்றன. வீரர்களின் செயல்பாடுகளை, புது தில்லியைச் சேர்ந்த இந்திய குதிரையேற்ற கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் மதிப்பீடு செய்கின்றனர். போட்டிக்கான பாதையை ஷார்ஜாவைச் சேர்ந்த போட்டிப் பாதை வடிவமைப்பாளர் வடிவமைத்துள்ளார்.

பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக், தனது முதல் சீசனை 2025 ஜூலை மாதம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. நாட்டின் சிறந்த குதிரையேற்ற வீரர்களை ஒருங்கிணைத்து, பார்வையாளர்களுக்கு போட்டி நிறைந்த மற்றும் சிறப்பான ஷோ ஜம்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த லீக் உருவாக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 29 ஆம் தேதி) நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. வி. சம்பத்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30 ஆம் தேதி) நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் எஸ். கமலி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சுகுமாரன், சத்யபாமா, தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

பரிசளிப்பு விழாவில் திரைப்பட நடிகர்கள் ஆர்யா, ஷ்யாம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க