• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய அணியை அதிக முறை வென்ற இங்கிலாந்து!

January 27, 2017 tamilsamayam.com

டி-20 அரங்கில் இந்திய அணியை அதிக முறை வீழ்த்திய அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி, 2-1 என கைப்பற்றியது. இதன் பின் இரு அணிகள் மோதிய முதல் டி-20 போட்டி கான்பூரில் நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, பேட்ஸ்மேன்கள் வெடிக்க தவற, 20 ஓவரில் இந்திய அணி, 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு, கேப்டன் மார்கன் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி, 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி -20 அரங்கில் இந்திய அணியை அதிக முறை வீழ்த்திய அணி என்ற பெருமை பெற்றது இங்கிலாந்து அணி. இதற்கு முன் நியூசிலாந்துடன் இந்திய அணி 5 போட்டியில் தோல்வியடைந்தது.

தவிர, டெஸ்ட் அரங்கில் தோல்வி யை சந்திக்காத கோல், தனது டி- 20 பயணத்தை தோல்வியுடன் துவங்கினார். இதன் மூலம் டி-20 போட்டியை தோல்வியுடன் துவங்கிய முதல் இந்திய கேப்டன் என்ற சோகமான சாதனை படைத்தார் கோலி.

இதோ போல தோனி பங்கேற்ற முதல் போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. சேவக், ரகானே , ரெய்னா ஆகியோர் தங்களது முதல் போட்டியை வெற்றியுடன் துவங்கினர்.

மேலும் படிக்க