• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மைதானத்தில் ரம்ஜான் கொண்டாடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்

June 15, 2018 தண்டோரா குழு

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் பாரம்பரிய ஆடைகளுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரம்ஜான் கொண்டாடினார்கள்.

இந்திய ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில்,இரண்டாவது நாள் போட்டி தொடங்குவதற்கு முன்பு ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்களது பாரம்பரிய உடையான குர்தா அணிந்து மைதானத்திற்குள் வந்தனர்.அப்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கு ஒருவரை கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் படிக்க