• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.பி.எல்.,லில் சாதிக்க கனவுகளுடன் காத்திருக்கும் ஒசூர் வீரர்!

April 5, 2017 tamilsamayam.com

இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடரில் சாதிக்கும் கனவுடன் காம்பிரின் கொல்கத்தா அணியில், தமிழகத்தின் ஒசூரைச்சேர்ந்த சஞ்ஜய் யாதவ் கனவுகளுடன் காத்திருக்கிறார்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடர் நாளை துவங்குகிறது. இதன் முதல் போட்டியில் கடந்த ஆண்டில் இரண்டாவது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சாம்பியன் பட்டம் வென்ற ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.

இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. இதில் ஒசூரைச்சேர்ந்த சஞ்ஜய் யாதவ் கொல்கத்தா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரது பூர்வீகம் உத்தர பிரதேசமாகும். இவரது தந்தை வேலைக்காக தமிழகத்தின் ஒசூரில் தஞ்சம் புகுந்தார். தினக்கூலியான இவர் தனது மகன் சஞ்ஜயின் பயிற்சிக்கு போதிய பணம் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.

ஒருவழியாக போராடி தனது திறமை மூலம் தமிழக கிரிக்கெட் லீக்கில் விளையாடிய இவரின் திறமைப்பார்த்து, காம்பிரின் கொல்கத்தா அணி இவரை ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த அணியில் வரிசையாக அனுபவ வீரர்கள் உள்ளதால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான். வாய்ப்பு கிடைத்து இவர் அசத்தும் பட்சத்தில் சர்வதேச அளவிற்கு முயற்சிக்கலாம்.

மேலும் படிக்க