• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு விலகியது ஏன் ?

October 15, 2016 தண்டோரா குழு

மாலத்தீவுக்கு எதிராக காமன்வெல்த் அமைப்பு செயல்படுவதால் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு வெளியேறுகிறது என மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் முகமது ஆசிம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள் விவகாரங்களில் காமன்வெல்த் அமைப்பு தலையிடுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மாலத்தீவுக்கு எதிராக காமன்வெல்த் அமைப்பு பாரபட்சமாக செயல்படுகிறது . மாலத்தீவின் சுதந்திரம், இறையாண்மையைப் பாதுகாக்க இக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ளோம் என மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் முகமது ஆசிம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காமன்வெல்த் பொதுச்செயலாளர் பேட்ரிகா ஸ்காட்லேண்ட் கூறுகையில்,

மாலத்தீவு மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் , கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு பிரிந்துவிட்டதாக கருதவில்லை இது ஒரு தற்காலிக பிரிவு தான். காமன்வெல்த் கூட்டமைப்பில் விரைவில் மாலத்தீவு மீண்டும் இணையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மாலத்தீவில் அதிபர் அப்துல்லா யாமின் அப்துல் கயூம் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் ஜனநாயகம் நசுக்கப்பட்டு வருவதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் காரணமாகவே காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு விலகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க