• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவைத் துணைவேந்தர்கள் சந்தித்தது ஏற்கத் தகுந்ததல்ல – பாஜக

December 23, 2016 தண்டோரா குழு

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவைச் சென்று பார்த்தது எந்த மாநிலத்திலும் நடக்காத நிகழ்வு, இந்த அணுகுமுறை ஏற்றுக் கொள்ளதக்கது அல்ல என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கருத்து தெரிவித்தார்.

பா.ஜ.க. இளைஞர் அணி செயற்குழுக் கூட்டம் கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் முரளிதரராவ் கூறியதாவது:

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு தமிழக முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் ஏன் வருமானவரித் துறைச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? வருமானவரித் துறைச் சோதனைகளை எதிர்ப்பவர்கள் கறுப்புப் பணத்தை ஆதரிப்பவர்களா?

பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் சசிகலாவைச் சென்று பார்த்தது எந்த மாநிலத்திலும் நடக்காத நிகழ்வு. இந்த அணுகுமுறை ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு ஆதரவாகத்தான் செயல்ப்பட்டு வருகிறது. தற்போது சட்ட ரீதியான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு வாரணாசியில் பிரதமர் மோடி பதிலளித்துவிட்டார். அதனால், வேறு எதுவும் கூறுவதற்கில்லை.

இவ்வாறு முரளிதரராவ் கூறினார்.

மேலும் படிக்க