• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை தொடங்கியது மத்திய அரசு

September 29, 2016 தண்டோரா குழு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக – தமிழகம் இரு மாநிலங்களுகிடையே சுமுகமான தீர்வு ஏற்படததால் 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கால வரம்பிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.மேலும், உச்ச நீதிமன்றம் அளித்த 4 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வகையில், அதற்கான பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க