• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போர்க்களமானது நிலக்கல்: ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் போலீசார் தடியடி

October 17, 2018 தண்டோரா குழு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலம் நிலக்கலில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி கேரள அரசு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று(புதன்கிழமை)மாலை திறக்கப்பட்டு 22–ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்து இருக்கும்.இதனால் பெண்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து,இன்று மாலை 5:00 மணிக்கு நடைதிறக்க இருப்பதால் இதில் கலந்துகொள்ள வரும் பெண் பக்தர்களுக்கு எந்த தீங்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக கேரள காவல்துறை 1500 போலீஸார்களை பாதுகாப்பிற்காக சபரிமலையில் குவித்துள்ளது.

இதையடுத்து,சபரிமலை பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில்,நேற்று கூடிய ஐயப்ப பக்தர்கள், அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்தி நிறுத்தி வருகின்றனர்.இதற்கிடையில்,சபரிமலையில் போராட்டக்காரர்களின் எதிர்ப்பை மீறி பம்பை வரை செல்ல முயன்ற 2 பெண் பக்தர்கள் தடுத்து,நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.அதைபோல் பம்பை அருகே செய்தி சேகரிக்க சென்ற 5 பெண் பத்திரிககையாளர்களை தாக்க முயற்சி நடந்தது.அவர்கள் வந்த வாகனங்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.ஆனால்,போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க