• Download mobile app
08 Jul 2026, WednesdayEdition - 3801
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை த்ரிஷாவுக்கு எதிராக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம்

January 13, 2017 தண்டோரா குழு

“பீட்டா”வுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டதாக நடிகை த்ரிஷாவுக்கு எதிராக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அவரது படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

காரைக்குடி அருகே நேமத்தான்பட்டியில், கவாஸ்கர் இயக்கத்தில், ஆர்யா, த்ரிஷா நடிக்கும் “கர்ஜனை” படப்பிடிப்பு நடைபெற்றது. இதனை அறிந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். நடிகை த்ரிஷா பீட்டா அமைப்புக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தார் என்று கூறி, எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

பீட்டாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட த்ரிஷா மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என போராட்டம் நடத்தியவர்கள் கூறியுள்ளார்கள்.

இதையெடுத்து, தகவல் அறிந்த காரைக்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் திரைப்படக் குழு படப்பிடிப்பு நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்று தெரியவந்தது. இதனை அடுத்து படப்பிடிப்புக்கு உதவிய வாகனத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க