• Download mobile app
22 Jul 2026, WednesdayEdition - 3815
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக்கில் குறைகளை கண்டறிவதில் இந்தியர்கள் முதலிடம்

October 14, 2016 தண்டோரா குழு

சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் ‘மென்பொருள் குறைகளை கண்டறியும் திட்டத்தின்’ கீழ், அதிக அளவில் பரிசு பணத்தை பெறுவதில், இந்த ஆண்டு இந்திய ‘ஹேக்கர்கள்’ தான் முதலிடத்தில் உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படுவது பேஸ்புக் ஆகும். புதிய நண்பர்களை இணைத்தல், சாட்டிங், புகைப் படங்ககள், வீடியோக்கள் சேர் செய்துவது என பல அம்சங்கள் பேஸ்புக்கில் உள்ளது.

இதுமட்டுமின்றி, பயனாளர்களின் பாதுகாப்புக்காக பேஸ்புக் நிறுவனம் தனது செயலியின் பாதுகாப்பில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிந்து களைவதற்காக, 2011-ஆம் ஆண்டு குறைகளை கண்டறியும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பேஸ்புக்கில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டும் அதனை கண்டறிபவர்களுக்கு பண பரிசுகளும் வழங்கபட்டன.

பேஸ்புக் தவிர அதன் கிளை நிறுவனங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சாப்புக்கும் இந்த சேவைகள் விரிவு செய்யப்பட்டது. இதில் இந்த வருடத்தில் பேஸ்புக்கில் அதிக குறைகளை கண்டறிந்து பரிசுகளை பெற்றதில் இந்தியர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பேஸ்புக்கில் உள்ள செயல்பாட்டு குறைபாடுகள் தொடர்பாக இந்த வருடம் இதுவரை 9000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகளில் பங்கெடுத்த 149 பேருக்கு இதுவரை, ரூ.4 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.இதில்,அதிக அளவில் பரிசுப்பணம் பெற்று இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும்,இரண்டாமிடத்தில் அமெரிக்காவும், மூன்றாமிடத்தில் மெக்சிகோவும் உள்ளன.

மேலும் படிக்க