• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

January 28, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் சனிக்கிழமை (ஜனவரி 28) அதிகாலையில் லாரியுடன் நேருக்கு நேராக கார் மோதியது. இந்த விபத்தில் 5 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தாராபூர் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர், பண்டோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

குஜராத் மாநிலத்தில் உள்ள போடாட் நகரில் திருமணத்திற்கு ஒரு குடும்பத்தை சேர்த்த ஆறு பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். தாராபூர் வடமன் நெடுஞ்சாலையில் எதிரே வந்த சரக்கு வண்டியுடன் நேருக்கு நேராக மோதியதில் 5 வயது குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காரில் இருந்த நீட்டா தொபாரியா (32), ஆசிஷ் (27), மந்தன் (5) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்த விபத்தை குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அந்த விபத்தில் படுகாயம் அடைந்த சேத்தன் தொபாரியா (32) அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மனிஷா மற்றும் விபுல் தொபாரியா ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க