• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரயில்வே சுரங்கப்பாதை திறக்க கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

October 16, 2018 தண்டோரா குழு

கோவையில் ரயில்வே சுரங்கப்பாதையை விரைந்து திறக்கக்கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

கோவை இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரயில்வே பாதை உள்ளதாகவும்,இந்த ரயில்வே பாதையில் நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வரும் நிலையில்,இந்த ரயில்வே பாதையை கடந்து தான் இருகூர் அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருவதாக தெரிவித்தனர்.அவ்வப்போது,ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும்,கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறும் மாணவர்கள்,இதனை தடுக்க கடந்த 3ஆண்டுகளுக்கு முன் ரூ.3கோடி மதிப்பில் சுரங்கப்பாதை பணிகள் துவங்கப்பட்டு இன்னும் முடியாமல் உள்ளதால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும்,ரயில்வே பணி முடிந்த நிலையில் நெடுஞ்சாலை பணிகள் தாமதத்தினால்,சுரங்கப்பாதை பணிகள் முடிவடையாமல் உள்ளதாகவும்,இதனால் அச்சத்துடனே ரயில்வே பாதையை கடந்து சென்று வருவதாகவும்,இல்லயென்றால் சுமார் 3கி.மீ., தொலைவிற்கு சுற்றி வர வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர்.இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்,நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாக கூறியதையடுத்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் படிக்க