September 15, 2026
தண்டோரா குழு
கோவையில் உள்ள சூயஸ் 24×7 குடிநீர் திட்ட அலுவலகத்தில் வினாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திட்டக் குழுவினர் அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் ஒன்றிணைந்து, சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டனர்.பாரம்பரிய முறைப்படி நடந்த இந்தப் பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றனர். வழக்கமான வேலைகளிலிருந்து சற்று விடுபட்டு, சக ஊழியர்கள் ஒன்றாகச் சிறிது நேரம் செலவிட்டதால் அலுவலகம் முழுவதும் பண்டிகைக் களையுடன் காணப்பட்டது.
கோவை சூயஸ் 24×7 குடிநீர் திட்டத்தின் முதுநிலை மேலாளர் புனிதகுமரன் கூறுகையில், “வழக்கமான பணிகளைத் தாண்டி நாம் அனைவரும் இணைந்து மகிழ பண்டிகைகள் வாய்ப்பளிக்கின்றன. வினாயகர் சதுர்த்தி என்பது நம்மில் பலருக்கும் ஒரு சிறப்பான நாளாகும். அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் ஊழியர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்று கூறினார்.
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.நமது பாரம்பரியப் பண்பாட்டைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அலுவலகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விழாவை கொண்டாடியது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தாக இதில் கலந்து கொண்ட அனைவரும் தெரிவித்தனர்.
வினாயகர் சதுர்த்தி நன்னாளில் அனைவருக்கும் சூயஸ் நிறுவனம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.