• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செங்கல் சூளையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர் வெட்டிக்கொலை

October 17, 2018 தண்டோரா குழு

கோவை துடியலூர் அடுத்துள்ள கணுவாய் பகுதியில் செங்கல் சூளையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள கணுவாயில் இருந்து தாளியூர் செல்லும் வழியில் உள்ள தடுப்பணை உள்ளது. அதன் அருகே 40வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடப்பதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தடாகம் பகுதியிலுள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வரும் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்றும்,கழுத்தில் அருவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும்,கொலை இரவு 12 மணியளவில் நடந்து இருக்கலாம் என்றும் தெரியவந்தது.

மேலும்,போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபணர்களை கொண்டு தடாயங்களை சேகரித்து கொலையாளியை தேடி வருகின்றனர்.செங்கல் சூளையில் வேலை செய்பவர் கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க