August 9, 2018
தண்டோரா குழு
கோவை குற்றாலம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் பலத்த காற்றும் வீசுவதால் மரங்கள் முறிந்து விழக்கூடும் சூழலும் உருவாகி உள்ளது.இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் செல்ல தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த ஒரு மாதங்களாக கோவை குற்றாலம் மூடப்பட்டிருந்தது.கடந்த நான்கு நாட்களாக திறக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.