September 28, 2018
தண்டோரா குழு
கோவையில் உள்ள,ரேபிடோ பைக் டேக்சி சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.கோவையை அடுத்த சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் மற்றும் நான்கு சக்கர வானங்களில் செல்லும் நபர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் கூறுகையில்,
“இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தது தொடர்பாக இதுவரை கோவை மாநகரில் 14,000 வழக்குகள் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.