• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கிகள் கடன்களை மீட்டு தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

November 5, 2016 தண்டோரா குழு

கடனை மீட்கும் வழிமுறைகளை வங்கிகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

கடன் மீட்பு குறித்து, புது தில்லியில் சனிக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

உள்நாட்டு முதலீடுகளே நாட்டின் பொருளாதாரத்தைத் தன்னிறைவாக்கும். ஆனால், அதில் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதே போல தனியார் முதலீடுகளை உயர்த்த, வங்கிகள் கடன்களைத் திரும்பப் பெற வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் பொது முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கின்றன. எண்ணெய் விலை குறைந்தது, நம்முடைய சேமிப்பை அதிகப்படுத்த உதவியது.

அடுத்தபடியாக அந்நிய நேரடி முதலீடுகள் நம்முடைய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.வெளிநாட்டவர் முதலீடு செய்ய இந்தியா விரும்பத்தக்க நாடாகத் திகழ்கிறது.அதே நேரம் அந்நிய நேரடி முதலீட்டிலும் சில சவால்கள் இருக்கின்றன.

இந்திய தனியார் துறை, முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும். வங்கிகள், அவர்களுக்குக் கடன் அளிக்கத் தயாராகும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.வங்கிகளிலிருந்து கடன் பெற்றவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்வது ஆயிரக்கணக்கானோர் தங்களது தொகையை பயனுள்ள வழியில் பயன்படுத்துவதைத் தடுப்பதாகும்.

அதனால் கடனை மீட்கும் வழிமுறைகளை வங்கிகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்” என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசினார்.

மேலும் படிக்க