• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3 எம்.எல்.ஏகளின் நியமனம் செல்லாது – புதுச்சேரி முதலமைச்சர்

July 6, 2017 தண்டோரா குழு

கிரிமினல் வழக்கு உள்ளவர்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாக நியமிக்கக்கூடாது, ஆகையால் ஆளுநர் நியமித்த 3 எம்.எல்.ஏகளின் நியமனம் செல்லாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“புதுச்சேரியில் மத்திய அரசு, மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துள்ளது. அவர்களுக்கு ஆளுநர் கிரண்பெடி ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த செயல் கண்டனத்திற்குரியது.

தற்போது பதவியேற்றுள்ள பா.ஜ.க வை சேர்ந்த சாமிநாதன் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர். சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கிரிமினல் வழக்கு உள்ளவர்களை சட்டப்பேரவை உறுப்பினர்களாக நியமிக்கக்கூடாது.

இதனால் இவர்களது இந்த நியமனம் செல்லாது. சபாநாயகர் இருக்கும்போது ஆளுநர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக பலமுறை மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளேன். இந்த விஷயத்திலும் அவர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து குடியரசுத்தலைவரிடம் புகார் செய்வேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க