• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பாக தேசிய அளவிலான ரோ போட்டிக் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை மாநாடு

October 9, 2023 தண்டோரா குழு

ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பாக தேசிய அளவிலான ரோ போட்டிக் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை மாநாடு கோவையில் நடைபெற்றது.

ரெக்ஸ் ஆர்த்தோ ஹாஸ்பிட்டலின் தேசிய அளவிலான நவீன மருத்துவத்துறையில் ரோபோட்டிக் மூலம் முழங்கால் மூட்டு மற்றும் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் பயன்களையும் நுணுக்கங் கள் குறித்த தேசிய அள விலான மாநாடு கோவை அவினாசி சாலையில் உள்ள ஹோட்டல் ரெசிடென்சி ஓட்டலில் அரங்கில் நடைபெற்றது.

கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பாக ஆறாவது ஆண்டாக நடைபெற்ற இதில், நவீன கால மருத்துவத்தில் ரோபோடிக் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை முறை பற்றி மற்ற மருத்துவமனைகளுக்கு கற் றுக்கொடுக்கவும் வரும் காலத்தில் ரோபோட்டிக் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை எப்படி தரமான சிகிச்சையை நோயாளி களுக்கு வழங்கும் என்பது பற்றியும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக நடைபெற்ற மாநாடு துவக்க விழா ரெக்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ரெக்ஸ் தலைமை யில் நடைபெற்றது. இதில் மல்லிகா சந்திரபோஸ் குத்துவிளக்கேற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு எலும்பியல் சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர்கள் வனசேகர், துணை தலைவர் மணிகண்டன்,செயலாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எலும்பியல் துறை தொடர்பான மருத்து வர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில்,ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் முடக்குவாதத் தால் முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சையில், சாதாரண முறையில் செய்யும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சையை விட நவீன ரோபோடிக் முறையின் பயன்கள் குறித்தும் இளம் மருத்துவர்கள் இந்த சிகிச்சை முறை குறித்து தெரிந்து கொள்வதன் அவசியம் குறித்து கலந்து ரையாடல் நடைபெற்றது.

மேலும் படிக்க