• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

April 17, 2026 தண்டோரா குழு

வாக்குரிமையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, பொறுப்பான குடிமக்களாக உருவாக்கும் நோக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கோயம்புத்தூர் மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் சி.டி.எம் ஹோம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இன்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை சிறப்பாக நடத்தின.

இந்த பேரணியை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜே.தினகர் தலைமையில், எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. இராம்குமார்,தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார்,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் எஸ்.ராஜகோபால்,மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.அழகப்பன் மற்றும் சி.டி.எம் ஹோம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் ஜீவரத்தினம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

காலை 9 மணியளவில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து துவங்கிய பேரணி, நகரின் முக்கிய பகுதிகள் வழியாக வ.உ.சி பூங்கா வரை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு கருத்துகளை வெளிப்படுத்தும் பலகைகள் ஏந்தி சென்றதுடன், முகஅலங்காரம் (Face Painting) மூலம் படைப்பாற்றலுடன் விழிப்புணர்வு செய்திகளை எடுத்துரைத்தனர்.மேலும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைவரும் வாக்காளர் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

இந்த பேரணி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க