• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வருகிறது “KFC” யின் ஸ்மார்ட் மொபைல் போன்

July 15, 2017 தண்டோரா குழு

பிரைட் சிக்கனுக்கு பெயர் போன கேஏப்சி நிறுவனம் சினாவின் ஹவாய் நிறுவனத்துடன் சேர்ந்து ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட உள்ளது.

கடந்த 1987ம் ஆண்டு சினா நாட்டில் பெய்ஜிங்கில் உள்ள கியன்மேன் என்னும் இடத்தில் கேஏப்சி தொடங்கப்பட்டது.சீனாவில் 3௦ வருடங்கள் சேவையாற்றியதன் நினைவாக, கேஏப்சி நிறுவனம் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஹவாயுடன் சேர்ந்து ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த ஸ்மார்ட் போனில் 5.5 அங்குல திரை, 32 ஜிபி சேமிப்பு, மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளது. இதன் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்த போனின் பின்பகுதியில் கேஎப்சி நிறுவனத்தின் நிறுவனர் கலோனல் சாண்டேர்ஸ் உடைய புகைப்படம் இருக்கும்.

முதலில், 5௦௦௦ ஸ்மார்ட் போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 10,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க