• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை நீடிப்பு

December 24, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியது. ஆனால், தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. நடா புயல் காரணமாக சென்னையில் ஓரளவுக்கு மழை பெய்தது. நடா புயலால் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.

இதற்கிடையில், டிசம்பர் 10-ம் தேதி வங்கக் கடலில் வலுப்பெற்ற வர்தா புயல் 12-ம் தேதி சென்னையை நேரடியாகத் தாக்கியது. இதன் பாதிப்பு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்தமான் அருகே கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் அப்படியே நீடிக்கிறது. வலுப்பெறவும் இல்லை, வலு இழக்கவும் இல்லை.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வங்கக் கடலில் தெற்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் அப்படியே நீடிக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும். கனமழையாக இருக்காது. லேசானது முதல் மிதமழையாக இருக்கும். இன்று சனிக்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க