• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையத்தில் “கிராம தங்கல்” திட்டம் – உழவர் சந்தையை பார்வையிட்ட மாணவிகள்

April 5, 2024 தண்டோரா குழு

வாணவராயர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் “கிராம தங்கல்” திட்டத்தின் ஒரு பகுதியாக உழவர் சந்தை மேட்டுப்பாளையத்தில் பார்வையிட்டனர்.

நிர்வாக அலுவலர் ஷர்மிளா,வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் மற்றும் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். அங்கு சுவர் ஓவியமாக காய்கறிகளின் பயன்பாடுகளை தீட்டி உள்ளனர் மிகவும் பயனாக உள்ளது.

இங்கு விவசாயிகளுக்கு இலவசமாக எடையிடும் மின்னணு தராசு,மேடை தராசு ,குளிர் சேமிப்பு கிடங்கு ,பேருந்து வசதி,மீண்டும் மஞ்சப்பை துணிப்பை இயந்திரம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அவரையில் மூக்குத்தி அவரை, சிறகு அவரை, தம்பட்டை அவரை மற்றும் டபுள் பீன்ஸ் மாணவிகள் புதிதாக தெரிந்து கொண்டார்கள். மேட்டுப்பாளையம் உழவர் சந்தை பயன்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக அமையப்பெற்றது.

மேலும் படிக்க