• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதலமைச்சராக பன்னீர் செல்வம் சிறப்பாக செயல்படுகிறார் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

December 24, 2016 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சிறப்பாக பணியாற்றுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 43-வது நினைவு தினம் சனிக்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்” என்று பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் உடன் கருத்து முரண்பாடு இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “பதில் ஏதும் கூறி திருநாவுக்கரசரின் மனத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை” என்று கூறினார்.

மேலும் படிக்க