• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவ,மாணவிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

March 8, 2017 தண்டோரா குழு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் எவ்வித அச்சமும்மின்றி சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்கள் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை தொடங்கியது. கோவையில் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி என இரண்டு கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தேர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்தில் 101 தேர்வு மையங்களில் 34,505 மாணவ மாணவிகளும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களில் 8001 மாணவ மாணவிகளும் என மொத்தம் 42,505 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்தில் 9 மையத்தில் 1,117 நபர்களும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 1 மையத்தில் 326 நபர்களும் என 1443 பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர். இதுமட்டுமின்றி பத்தாம் வகுப்பிற்கு தட்கல் தேர்வு முறையில் விண்ணப்பித்து 377 நபர்கள் 3 மையங்களில் தேர்வு எழுதி வருகின்றனர்.

“கோவையில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் முடியும் வரை மாணவ,மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் போது எவ்வித அசம்பா விதங்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் ஒவ்வொரு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.

எனவே மாணவ மாணவிகள் எவ்வித அச்சமும்மின்றி சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்” என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க