• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகளை கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை

January 17, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் மகளை கொலை செய்த வழக்கில் தாய் பர்வீனுக்கு மரணதண்டனையும் சகோதரர் அனீஸுக்கு ஆயுள்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை(ஜனவரி 17) கூறியதாவது:

“பாகிஸ்தானில் உள்ள லாகூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீன் பிபி. இவரது மகள் ஜீனத் ரபிக்(வயது 18). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினர் அனுமதியின்றி ஹசன் கான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெற்றோர் வீட்டிற்கு செல்லாமல் கணவனுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் பாரம்பரியத்தின்படி திருமண வரவேற்பு விழா நடத்தவேண்டும் என்று ஜீனத்தை வீட்டிற்கு அழைத்து வந்த அவரது தாய் ஜீனத்தை தாக்கியுள்ளனர். ஆத்திரம் அடங்காத தாய் பர்வீன் ஜீனத் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றுள்ளார்.

ஜீனத்தின் உடலை வாங்க அவளுடைய குடும்பதில் வேறுயாரும் முன்வரவில்லை. தீயில் கருகிய அவளுடைய உடலை கணவன் வீட்டார் உடலை அடக்கம் செய்தனர்.

இது தொடர்பாக ஜீனத்தின் தாய் பர்வீன் மற்றும் சகோதரர் அனீஸ் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்ற நீதிபதிகள் பர்வீனுக்கு தூக்கு தண்டனையும் அனீஸுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க