• Download mobile app
26 May 2026, TuesdayEdition - 3758
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு

June 5, 2017 தண்டோரா குழு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் இன்று சந்தித்தார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நேற்று முன் தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த தினகரன், தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபடப்போவதாகவும், அதிமுக கட்சியை பலப்படுத்த முயற்சி எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நேற்று முழுவதும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தினகரன், இன்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுளள சசிகலாவை சந்திப்பதற்காக காலை பெங்களூரு சென்றார்.

அவருடன் அவரது மனைவி அனுராதா, அதிமுக எம்.பி மற்றும் 10 எம்.எல்.ஏக்கள், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சென்றனர்.

இதனைதொடர்ந்து, இன்று மதியம் மூன்று மணி அளவில் பரப்பன அக்ரஹாரம் சிறைக்கு தனது மனைவி அனுராதாவுடன் சென்ற டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் படிக்க