• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புது வீட்டில் குடியேறிய ஓபிஎஸ்

March 9, 2017 தண்டோரா குழு

தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புதிய வீட்டிற்கு வியாழக்கிழமை
குடிபுகுந்தார்.முதலமைச்சராக இருந்த போது அரசு சார்பில் அவருக்கு கீரின்வேஸ் சாலையில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது.

அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதும், பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்திலிருந்து அவரை காலி செய்யுமாறு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து போயஸ் கார்டன் பகுதியிலுள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்திற்குப் பின்புறம் இருக்கும் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள புது வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை குடியேறினார். இனி, இந்த வீட்டில் இருந்துகொண்டுதான் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க