• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பில்லூர்-3 திட்டம் 2035ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தயாரிப்பு

April 29, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணையில் இருந்து குடிநீர் வழங்க பில்லூர்-3 திட்டம் 2035ம் ஆண்டு கோவை மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரூ.779 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ்,மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை,மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய இடங்களில் கட்டுமான பணிகள் மற்றும் ராட்சத குடிநீர் குழாய் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை, தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் அம்பலவாணன், கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் விதத்தில் இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதுபற்றி அம்பலவாணன் கூறியதாவது:

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்று நிலையம் கட்டுமானப்பணி தற்போது 95 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. மின்சார இணைப்பு பணிகள் சுமார் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, முருகையன் பரிசல்துறை பகுதியிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதூர் பகுதிக்கு குடிநீர் பம்பிங் செய்து கொண்டு வரப்படுகிறது. மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் பில்லூர் அபிவிருத்தி திட்டம்-3, ரூ.104.90 கோடி மதிப்பீட்டில் 178 எம்எல்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு, கட்டுமானப்பணிகளின் தரமும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, தண்டிப்பெருமாள்புரம் பகுதியிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கட்டன்மலைக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
அதன்பின்னர், கட்டன்மலை பகுதியில் ரூ.62.00 கோடி மதிப்பில் 900 மீட்டர் தொலைவிற்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுள்ளது. மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான முறையில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்க பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விடத்திலிருந்து பன்னிமலை பகுதியில் 146 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கும் பகுதிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு, மாநகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏதுவாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருவமழை துவங்கும் முன்பு இப்பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொது மேலாளர் முருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜூ, செயற்பொறியாளர் செல்லமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், பட்டன், பாலமுருகன் (மாநகராட்சி), உதவி பொறியாளர் சாம்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க