• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை 2 பேர் பலி

March 9, 2017 தண்டோரா குழு

தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தின் பட்கம்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை (மார்ச் 9) நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து மத்திய ரிசர்வ போலீஸ் படை வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக் குழு புல்வாமா பகுதியில் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு, அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர்.

அங்கு பதுங்கியிருந்த 2 முதல் 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட ஆரம்பித்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

“உயிரிழந்த தீவிரவாதிகள் ஜஹாங்கீர் கனி மற்றும் முஹம்மத் ஷஃபி என்கிற சேர் குஜ்ரி என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உள்ளூர் காவல்துறை அதிகாரியைக் கொலை செய்த சம்பவத்தில் கனை சம்பந்தப்பட்டுள்ளான். உயிரிழந்த இருவரும் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்” என்று மூத்த மத்திய ரிசர்வ போலீஸ் படை அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், சண்டை நடந்துகொண்டிருக்கும் பட்கம்போரா கிராமத்தின் அருகில் உள்ள ரயில் பாதை வழியாக பனிஹல் பாரமுல்லா ரயில் செல்வதால், அதனுடைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க