• Download mobile app
20 May 2026, WednesdayEdition - 3752
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாக். சிறையில் இருந்த 218 இந்திய மீனவர்கள் விடுதலை

January 6, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 218 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்தது.

இந்திய மீனவர்கள் 439 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் அரசு கைது செய்தது. அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. முதல் கட்டமாக கடந்த டிசம்பர் 25ம் தேதி பாகிஸ்தானின் மலிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 220 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை மேலும் 218 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. அவர்கள் ரயில் மூலம் லாகூர் அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கிருந்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையில், ஒரு மீனவர் மாரடைப்பால் சிறையில் மரணம் அடைந்துவிட்டார் என பாகிஸ்தான் சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

யூரி தாக்குதளுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க