• Download mobile app
16 Mar 2026, MondayEdition - 3687
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பனிச்சரிவில் 5 வீரர்கள் பலி

January 25, 2017 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதன்கிழமை(ஜனவரி 25) காஷ்மீர் ராணுவ முகாம் மீது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில்

“காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சொனாமார்கில் உள்ள ராணுவ முகாம் மீது பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 5 வீரர்கள் உயிரிழந்னதுள்ளனர்.இறந்த வீரர் ஒருவருடைய சடலம் கிடைத்துள்ளது. இறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கருதுகிறேன்.”

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில நாட்களாகவே கடுமையான உறைப்பனி பெய்து வருகிறது. முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 4 பேர் உயிரோடு புதைக்கப்பட்டனர். ஜனவரி 26ம் தேதி வரை பரவலாக மழை மற்றும் பனிப்பொலிவு இருக்கும் என்று பிராந்திய வானிலை ஆய்வு அலுவலகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து மலைப்பகுதி மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க