• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பட்ஜெட் கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் – எதிர்கட்சிகள்

January 6, 2017 தண்டோரா குழு

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை ஒத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை உத்தரப் பிரதேசம், உத்தரா கண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு வியாழக்கிழமை சென்று மனு அளித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் மத்திய பட்ஜெட்டை ஒத்தி வைக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவரான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசுகையில், “வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் தேர்தல் நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்காது. எனவே, தேர்தல் முடியும் நாளான மார்ச் 8-ம் தேதிக்குப் பிறகு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம்” என்றார்.

மேலும் படிக்க