• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் 39 வது ஆண்டு விழா

January 29, 2026 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் 39 வது ஆண்டு விழா (Mahotsav -2026) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பல்கலை மானிய குழு – மாளதியா மிஷன் ஆசிரியர் பயிற்சி பள்ளி இயக்குனர் சுரேஷ் பாபு கலந்து கொண்டு கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

விழாவில் அவர் பேசுகையில்,

இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் தூண்கள்.ஆசிரியர்கள் பெற்றோர்களை விட மேலானவர்கள். மாணவர்களுக்கு தலைமை பண்பு ஆசியர்களிடம் இருந்து தான் வருகிறது. மாணவர்கள் என்னவாக ஆக விரும்புகிறார்களோ அதற்கு அனுமதிக்க வேண்டும்.பெற்றோர்கள் இது போன்று தான் எதிர்காலத்தில் ஆக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மோகன் சந்தர்,செயலாளர் உமா மோகன் சந்தர்,பள்ளி முதல்வர் பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்சிகள் நடைபெற்றது.நிகழ்வில் நேஷனல் மாடல் கல்வி குழும பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க