• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கேரளாவில் கைது

July 10, 2017 தண்டோரா குழு

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி கொச்சியில் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. இது கேரளவில் மட்டுமின்றி திரையுலகினர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் பல்சர் சுனில் உட்பட 6 பேர் கைது செய்தனர்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீபின் உத்தரவின் பேரிலேயே பாவனா கடத்தப்பட்டார் என்று தகவல்கள் பெரிதாக பேசப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் போலீஸார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த சில தினங்களாக திலீப்புக்கு நெருக்கமான சில நடிகர்கள் மற்றும் சிறையில் வைத்து பல்சர் சுனிலுக்கு உதவிய சிலரிடமும் விசாரணை நடைபெற்றது.இவர்களிடம் விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் தான் போலீசுக்கு கிடைத்தது. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையாள நடிகர் திலீப், தூண்டுதலின் பேரில் பாவனாவை கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் நடிகர் திலீபிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்ற சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க