• Download mobile app
15 Apr 2026, WednesdayEdition - 3717
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தைரியமான சீர்திருத்த முடிவுகள் அவசியம் – அருண் ஜேட்லி

January 11, 2017 தண்டோரா குழு

நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க தைரியமான சீர்திருத்த முடிவுகள் அவசியம் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்று வரும் “துடிப்பான குஜராத்” (வைப்ரண்ட் குஜராத்) மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி புதன்கிழமை பேசியதாவது:

“அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. மறைமுகப் பொருளாதாரம் வளர்வதை அனுமதிக்க முடியாது.

சரக்கு வரி சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் பண மதிப்பு நீக்கம் ஆகியவை வளர்ச்சிக்குத் தேவையானதே. இதற்கான பலன் இந்த ஆண்டே கிடைக்கும். நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க தைரியமான சீர்திருத்த முடிவுகள் அவசியம்.

பணமதிப்பு நீக்கத்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தி நேர்மையானதாகவும், அதிகமாகவும் இருக்கிறது.”

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க