• Download mobile app
28 May 2026, ThursdayEdition - 3760
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணைக் குடியரசுத்தலைவர் தேர்தல் – வெங்கையா நாயுடு வேட்புமனு தாக்கல்

July 18, 2017 தண்டோரா குழு

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடு, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியோடு முடிவடைகிறது.இதனையடுத்து புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி பேரன் கோபாலகிருஷ்ண காந்தியும், பா.ஜ.க கூட்டணி சார்பில் வெங்கைய்யா நாயுடுவும் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க, சார்பில் அறிவிக்கப்பட்ட வெங்கைய்யா நாயுடு, பிரதமர் மோடி, அமித் ஷா, பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க