• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசு அழைப்பு

August 15, 2017 தண்டோரா குழு

திருவாரூரில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை கொண்டாடி வருகிறது. இதனிடையே வரும் 19-ம் தேதி திருவாரூரில் தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட உள்ளது.

இதற்கான விழா அழைப்பிதழில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.எல்.ஏக்.,களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதில், திருவாரூர் எம்.எல்.ஏ., திமுக தலைவர் கருணாநிதியின் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள மாட்டார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க