• Download mobile app
21 Sep 2024, SaturdayEdition - 3146
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம்

October 9, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்ற முடிந்த சூழ்நிலையில் மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமை மகப்பேறு மரண தணிக்கை மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இதில் விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மற்றும் தேசியத் திட்ட இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது அதனை பரிசீப்பதாக கூறிவந்தனர்.அதேபோல மதுரை மாநகர சுகாதார அலுவலரின் பணியிடை நீக்கம் குறித்தும் எந்த விதமான தீர்வும் கிடைக்கவில்லை என்று கூறி இன்று மாநிலம் முழுவதும் காலை ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து அனைத்து டாக்டர்கள் சங்கத்தினர் அந்தந்த அரசு மருத்துவமனைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் அனைத்து விதமான பணிகளையும் புறக்கணித்து மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க