• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்திற்கு 2000 கனஅடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு

January 4, 2017 தண்டோரா குழு

தமிழகத்திற்கு விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நதிநீர் வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்தே, “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால், தமிழகத்தில் 60 சதவீதம் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தொடர்ந்து காவிரியில் விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் ” என வாதத்தை முன்வைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்திற்குக் காவிரி நதியிலிருந்து விநாடிக்கு 2000 கனஅடி நீரைக் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 7 ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. பிப்ரவரி 7 ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும். தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி என ஒவ்வொரு தரப்பிற்கும் பதிலளிக்க 3 வார கால அவகாசம் வழங்கப்படும்” என்றார்.

மேலும் படிக்க