• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெங்குவை ஒழிக்காவிட்டால் ஒதுங்கி கொள்ளுங்கள்: அரசுக்கு கமல் வேண்டுகோள் !

July 20, 2017 தண்டோரா குழு

டெங்குவை ஒழிக்காவிட்டால் ஒதுங்கி கொள்ளுங்கள் என தமிழக அரசுக்கு கமல் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் சமீபகாலமாக அரசியல் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் கமல் கருத்து தெரிவித்தார். அதற்கு பின் அமைச்சர்களும் கமலுக்குமிடையே கருத்து யுத்தம் ஆரம்பமானது. இதற்கிடையில், நேற்று கமல் நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன். ஊழல் குறித்த விவரங்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள் என்று டுவிட்டரில் கேட்டுக்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், இன்றும் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,பள்ளிப் படிப்பை முடிக்காதவன் ” நீட்” ன் கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம்!என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க