• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமில்லை – நடிகர் மணிகண்டன் !

February 5, 2024 தண்டோரா குழு

காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லவ்வர் திரைப்பட அறிமுகமாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் மணிகண்டன் நடிகர் டெல்லி கணேஷ் போன்று மிமிக்ரி செய்து திரைப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ள லவ்வர் திரைப்பட குழுவினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மணிகண்டன்,

கல்லூரி காலம் முடிந்த பிறகு இளைஞன் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்த கதை அம்சத்துடன் காதலை மையமாக கொண்டு இந்த படம் தயாராகி இருப்பதாகவும் திரைப்படம் என்ற ஒரு எண்ணம் மக்களுக்கு வராத மிக தத்ரூபமாக வாழ்க்கையை எடுத்து கூறும் விதத்தில் படம் உருவாகி உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இந்த படத்தின் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ள கௌரி மற்றும் தான் உட்பட அனைவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளதாகவும் வருகிற ஒன்பதாம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாகவும் கூறினார். மேலும் ஜெய்பீம் படத்திற்கு தனக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி வருத்தப்படவில்லை எனவும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போதும் மிக விரும்பியே தான் நடிப்பதாகவும் சுட்டி காட்டினார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் கூறிய அவர், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து நடிகர் டெல்லி கணேஷ் குரலில் மிமிக்கிரி செய்த மணிகண்டன் லவ்வர் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க