• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா பிறந்தநாள்- 69 லட்சம் மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

February 24, 2017 புதிய செய்திகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் தொடக்கமாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மகிழம்பூ மரக்கன்றை நட்டு, திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

இந்த மரக்கன்றுகளை நடும் பணி பிப்ரவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். மேலும், இம்மரக்கன்றுகள் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஆகியவற்றின் வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பருவநிலை மற்றும் மண்வளத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளான ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற மரக்கன்றுகள் நடப்படும்.

இந்த மரக்கன்றுகள் வாங்குவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.13 கோடியே 42 லட்சம் செலவிட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் வனத்துறை சார்பில் 69 லட்சம் மரக் கன்றுகள் நடப்படுகின்றன.

மேலும் படிக்க