• Download mobile app
27 Jul 2026, MondayEdition - 3820
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜனநாயக கடமையாற்றுவார்களா கமல். சூர்யா?

May 14, 2016 தண்டோரா குழு.

நாளை மறுதினம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்து நூறு சதவிகித வாக்குப்பதிவை எட்ட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் பட பூஜை விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன், எனது ஓட்டைக் கடந்த முறை யாரோ மாற்றிப் போட்டுவிட்டார்கள் என்பதால் இந்தமுறையும் போடுவது சந்தேகமே எனத் தெரிவித்திருந்தார். மேலும் வாக்குப்பதிவு அன்று தான் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்வதாக தெரிவித்த கமல் தன்னுடைய பெயர் தற்போது வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் குற்றம்சாட்டினார். இதையடுத்து தேர்தல் ஆணையம் கமல் மற்றும் கவுதமியின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பதிலடி கொடுத்தனர். ஆனால் இது குறித்து கமல் விளக்கம் கொடுக்கவில்லை. வரும் திங்களன்று தான் அவர் ஜனநாயக கடமை ஆற்றுவாரா இல்லையா எனத் தெரியவரும்.

அதே போல கடந்த ஏப்ரல் 30ம் தேதி குடும்பத்துடன் இருவார ஓய்விற்காக அமெரிக்கா சென்ற சூர்யா தற்போதும் அமெரிக்காவில் தான் உள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தமிழக மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களித்து நூறு சதவிகிதம் வக்குப்பதிவை உறுதி செய்யவேண்டும் என ஆயிரம் முறை விளம்பரத்தில் கூறியிருப்பார். இந்நிலையில் அவரே வந்து ஒட்டு போடவில்லை எனில் அவரது ரசிகர்கள் அனைவரும் ஒட்டு போடுவார்களா என்பதே சந்தேகமாகிவிடும். இந்நிலையில் திங்கள் அன்றுதான் இருவரும் ஜனநாயக கடமை ஆற்றுவார்களா இல்லையா என்பது தெரியும்.

மேலும் படிக்க