• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை !

September 30, 2023 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை 31.10.2023 – க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேற்படி சொத்துவரி தொகையினை ரொக்கம்,கடன் மற்றும் பற்று அட்டை காசோலை மற்றும் வரைவோலை மூலமாக மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களிலும்,மேலும் tnurbunepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இயக்குநரக இணையதள டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்தலாம்.

எனவே , மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மேற்காணும் வசதியினை முழுமையாக பயன்படுத்தி , 2023-24ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான தங்களது சொத்துவரியினை அக்டோபர் 31 ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் வரை ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு ( முழு கூடுதல் பொறுப்பு ) மரு.ச.செல்வசுரபி
தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க