• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிலி நாட்டில் காட்டுத் தீ, 100 வீடுகள் சாம்பல்

January 4, 2017 தண்டோரா குழு

சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 1௦௦ வீடுகள் சாம்பலாயின. 400 பேர் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வேகமாகக் காற்றடித்ததால், தீ பரவி, இந்தச் சேதம் ஏற்பட்டது. தீயினால், 19 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை (ஜனவரி 3) கூறியதாவது:

“சிலி நாட்டின் துறைமுக நகரமான வல்பரைசோவில் உள்ள லகுனா வேர்டே நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ பரவியது. ப்ளையா அஞ்சா மலையில் ஏராளமான வீடுகள் மரத்தால் ஆனவை. காட்டுத் தீயால் 1௦௦ வீடுகள் சாம்பலாகிவிட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து 400 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஒரு மணி நேரத்தில் 3௦ கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் தீயணைப்பு வீரர்களும் வனத்துறையினரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். நீர் நிலைகள் வறண்டு இருப்பதாலும், சாலைகள் குறுகலாக இருப்பதாலும் அதிகம் போராட வேண்டியுள்ளது. அப்பகுதி மக்கள் வெளியே செல்ல நேரிடும் போது தீ மற்றும் மாசு புகையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முகமூடிகள் அணிய வேண்டியுள்ளது” என்றார்.

சிலி நாட்டின் உள்துறை சார்புச் செயலாளர் முகம்மது அலேயு கூறுகையில், “அப்பகுதியில் இருந்த 1௦௦ வீடுகள் சேதமடைந்துள்ளன” என்றார்.

ஆளுநர் கப்ரியேல் அல்டோனே கூறுகையில், “5௦௦ வீடுகள் ஆபத்தில் உள்ளன. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட 16 பேருக்குச் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என்றார்.

அதே துறைமுக நகரில், 2௦14ல் நடந்த தீ விபத்தில் 2,5௦௦ வீடுகள் நாசமாயின. 15 பேர் உயிரிழந்தனர். அழகிய வண்ணங்களைக் கொண்டு குன்றின் மேல் உள்ள வீடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் அந்நகரம் 2௦௦3ல் உலக பாரம்பரிய இடமாக ஐ.நா. சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க