• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுமிக்கு உதவ தன்னுடைய பதக்கங்களை விற்ற கடற்படை வீரர்

August 23, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் முன்னாள் கடற்படை போர் வீரர், தனக்கு கிடைத்த பதக்கங்களை விற்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவி செய்துள்ளார்.

அமெரிக்காவில் லோட்டி வுட்ஸ் என்னும் இரண்டு வயது சிறுமி, அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை குறித்து பத்திரிக்கை ஒன்றில் படித்தார்.லோட்டிக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவளுக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டது. அவள் உடம்பிலிருந்த 95 சதவீத புற்றுநோய் கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. புற்றுநோய் மீண்டும் வராமல் இருக்க எடுக்க வேண்டிய சிகிச்சைக்கு சுமார் 2௦௦,௦௦௦ டாலர் தேவைப்பட்டது.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய 3 பதக்கங்களை 2௦௦,௦௦௦ டாலருக்கு விற்று அந்த சிறுமிக்கு உதவினார்.எனக்கு கிடைத்த பதக்கங்கள் எந்த பிரயோஜனமும் இல்லாமல் இருந்தது. அதை விற்று, அந்த சிறுமியின் சிகிச்சைக்கு தந்து உதவியது மனதிற்கு நிம்மதியை அளிக்கிறது.

இந்தப் பதக்கங்கள் ஈராக் நாட்டில் நடந்த போரில், அவருடைய சேவையைப் பாராட்டி அமெரிக்க அரசு வழங்கியது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க